states

img

மீண்டும் முதல்வராக ஹேமந்த் சோரன் பதிவியேற்பு!

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார். 
நில மோசடி யுடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரனை, கடந்த ஜூன் 28 அன்று ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுதலை செய்தது. இதை தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் சம்பய் சோரன், நேற்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

;